web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 211 ஈழத் தமிழர்கள் மீட்பு

[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட், 2012, ]
புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக
மெல்போர்ன்: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக ஒரே படகில் சென்ற 211 ஈழத் தமிழர்களை ஆஸ்திரேலிய கடற்படை மீட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு வடக்கே இந்தோனேசிய கடற்பரப்பில் ஈழத் தமிழர்களின் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியாவின் ரோந்து படகுகள், ஈழத் தமிழர் படகை அடையாளம் கண்டது. இதையடுத்து படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 211 ஈழத் தமிழர்களை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை மாற்று படகுகள் மூலம் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே படகில் இருநூற்றுக்கும் அதிகமானோர் அகதிகளாக பயணித்து வந்திருப்பது தற்போதுதான் என்று கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகலிடம் கோரி படகு மூலம் ஆஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். இவர்களில் ஈழத் தமிழர்களே அதிகம். ஈழத் தமிழர்களைப் போல் ஈரானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களும் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு 4,565 பேரும் 2010 ஆம் ஆண்டில் 6,555 பேரும் புகலிடம் கோரி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
Published news:
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)