web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தீபாவளி எல்லாம் தெரியாது பொங்கல் மட்டுமே கொண்டாடும் விசித்திர கிராமம்

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ]
தீபாவளி எல்லாம் தெரியாது
செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செக்கடி குப்பம் கிராமம். இங்கு 160 வீடுகள் உள்ளது. 1200 பேர் வசிக்கின்றனர்.

விவசாயம் மட்டுமே இவர்களுக்கு தொழில். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பொங்கல் திருநாளை மட்டுமே கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி உள்ளிட்ட விழாக்களை இவர்கள் நினைத்து கூட பார்ப்பது இல்லை. திருமண வைபவங்கள் கூட நடந்தால் அதற்காக ஒதுக்கப்பட்ட ராவணே அசுரன் நினைவு மண்டபத்தில் தமிழ் முறைப்படி தான் நடக்கும்.

புரோகிதர்களை அழைப்பது கிடையாது. பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களையே சூட்டுவர். எடுத்துக்காட்டாக கப்பலோட்டிய தமிழன், கனல்மொழி, யாழ்முல்லை, செந்தமிழ், முத்தமிழ் என பெயர் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கிராமத்தில் பனை மரங்களை அதிகமாக வளர்த்து வருகின்றனர். ஏனென்றால் காகிதம் இல்லாத காலத்தில் பனை ஓலை தான் தமிழ்மொழி வரைய முக்கிய பங்கு வகித்தது. இவற்றை நினைவு கூறும் வகையில் எங்கு திரும்பினாலும் பனைமரங்கள் தான். இந்த கிராமத்தில் குடிபழக்கம் கிடையாது.

தமிழ் பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளையும் அதன் நெறி தவறாமல் வளர்த்து வருகின்றனர். அதற்காக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் வழியில் தாய் தமிழ் தொடக்க கல்வி உருவாக்கி நடத்தி வருகின்றனர். பள்ளியில் 60 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர்.

மேலும் தமிழ் பண்பாட்டை உணர்த்தும் தமிழ் நாடகங்களை சித்திரை, வைகாசி மாதத்தில் நடத்துகின்றனர். இது போன்ற கிராமங்கள் இன்னும் நம் தமிழ்நாட்டில் இருக்கத் தான் செய்கிறது என்பதை பார்க்கும் போது பெருமையாகத்தான் உள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்   (20/05/2013) 
  தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை   (20/05/2013) 
  வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது   (20/05/2013) 
  மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!   (19/05/2013) 
  கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு   (19/05/2013) 
  மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை!   (19/05/2013) 
Published news:
  ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது   (14/05/2013)
  ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம்   (14/05/2013)
  4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது   (14/05/2013)
  கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி!   (13/05/2013)
  மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா?  (12/05/2013)
  காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம்   (12/05/2013)